காரியாலயம் போவாள்
கார் மேலே பவனி வருவாள்
கற்று முடிந்ததும் கஸ்ரங்கள்
தீரும் ஒரு வழியாக வேலையோடு
தலை நிமிர்ந்து என் பிள்ளை
வாழ்வாள் என்று கற்பனை
வளர்த்தேனடி மகளே .....///
பெத்த மனம் பதைக்கின்றதம்மா
இன்று நீ காடு மேடு தேடி போகையிலே
கட்டை மேலே ஏற்றி கருக வைக்க
உன் உடலைத் தூக்கையிலே தாங்க
முடியாது தவிக்குதம்மா தாய் மனம்
பதைக்குதம்மா ......////
வேங்கையென வெகுண்டு எழுந்து
பல மிருகக் குணங்களை வேட்டை
ஆடிய ஆண்கள் வாழ்ந்த ஊரம்மா
இப்போது காலம் செய்த மாயம்
வெறிநாய்கள் வளர்ந்து சூரையாடுது
பெண்கள் வாழ்வையம்மா ......////
அவனை இனம் கண்டு விட்டால்
போதுமடி இரணியனாவாள் உன்
அன்னையம்மா ....////
...................................................
சிறு பிள்ளையின் ஆத்மா சாந்திக்கு
இறைவனை பிரார்த்தனை செய்வோம். :-(
No comments:
Post a Comment