Wednesday 24 February 2016

புதுக்கவிதை


புதுமையின் புதுமைகள்
அத்தனையும் விந்தைகள்.
புது வரவாகக் கொண்டு
வந்து இணைத்தது பல சொந்தங்கள்.
புது புது தலைப்புக்களில்
ஒரு வித தவிப்பைக் கொடுத்து
வளர்த்து விட்டது கற்பனைகள்.
புதுமையின் பூக் கொடியிலே
அத்தனை மலரும் சிறந்தவைகள்.....//

ஒற்றுமையாக கவி கொடுக்கும் கவிஞர்கள் .
வெவ்வேறு தேசத்துப் பறவைகள்.
விரைந்து வந்து கருத்திடும் உறவுகள்.
வியர்ப்புக் கொடுக்கும் புகைப்படங்கள்......//

புதுமைக்கு கொடுப்பதோ பூமாவின் பூக்கள்.
வியற்கத்தக்க புதுமையின் வளர்சிகள்.
ஏறியது பட்டம் போல் இப்போது பல கண்கள்.
புதுமைப்பக்கம் போடுது நோட்டங்கள்.....///

புதுமையின் கட்டுப் பாடு
வரவேற்கதக்க விடையங்கள்.
கட்டுப்பாடு தழராத வாறு வழி நடாத்துவது
பாராட்டத்கக்க விஷயங்கள்.
கட்டெறும்பு அணி போல் வளர்ந்து
விட்டது புதுமையிலே நட்புக்கள்.
இனி எட்டிப் பறிக்கப்போகின்றார்கள்
வெற்றிக் கனிகள்........////

விட்டுக் கொடுப்பதும் தட்டிக் கொடுப்பதும்
நல்ல மனிதனின் செயல்கள்.
பாராட்டுவதும் பேர் போட்டு போற்றுவதும்
நல்ல ஆசானின் செயல்கள்.
புதுமைப் பக்கம் நல்ல
நண்பர்களுக்கு சொர்க்கம்.
தரமான கவிதைகளை பதிவு
செய்ய வேண்டாமே தயக்கம்.........////

No comments:

Post a Comment