Sunday 28 February 2016

வரமா சாபமா


செத்து மடிந்த உடல் எடுத்து
சிற்பமாக செய்த வடிவமோ
இலங்கை  ....///

அரை குறை உயிருடன் துடித்த
உடலில் இருந்து  வடிந்த குருதி
எடுத்து தீட்டிய வண்ணமோ
இந்த சென் நிறம் ......////

தமிழன்  சிந்திய உப்புக் கண்ணீருடன்
இணைந்து அவனின் உடலால் வடிந்த
இரத்தமும்  பாதாளத்தி பத்திரமாக
உள்ளதோ ....../////

வேதாளம் மீண்டும்  மீண்டும்
முருங்கை மரம்  ஏறுவது போல்
எங்கள் நாடாள வரும் குள்ள
நரிகளின் கபட நாடகம் .....////

இழப்பதற்கும் இனி ஒன்றும் இல்லை
கேட்டாலும் எவையும் இனிக்
கிடைப்பதில்லை இரண்டும் கெட்ட
நிலையினிலே தமிழன் வாழ்வு
தவிப்பினிலே. ..../////

அழகிய தீவு இலங்கை  நான்கு
பக்கமும் கடல் நீர் நடுவினிலே
வாழும் மக்களுக்கோ தொடர்
கண்ணீர் .......////

தண்ணீரால் சூழப்பட்ட நாடு
கண்ணீருக்குக் கைதியாகி
விட்டது பாரு .....///

உலகில் வற்றாதவை அழியாதவை
கடல் நீர் தமிழன் வாழும் வரை
நிலையாகிப் போனது வலியோடு
கண்ணீர் ......////

களை எடுக்கவும் ஆள் இல்லை
துணிவோடு அதட்டவும் ஆள் இல்லை
எதிர்க் கேள்வி கேட்கவும் ஆள் இல்லை
தலை குணிந்து வாழ்வதுதானா தமிழனுக்கு
முடிவான நிலை?

  

No comments:

Post a Comment