தடாகத்தின் சாதனைகளை
தடம் புரட்டிப் போட இயலுமா?
பதித்து விட்டது முத்திரை பல
வகையிலும் இதைப் பார்த்து
இழந்து விட்டனர் சிலர் நித்திரை.
எத்தனையோ பேருக்கு வழி
காட்டியாகவும் உலகலாவிய
நிலையில் போட்டிகளும் கை
மேலே நினைவாக நிலைத்து
விடும் வண்ணம் சாண்றிதழும்
கொடுத்து கௌரவம் அடைய
வைப்பதில் தடாகத்துக்கு நிகர் தடாகமே.
இவைகளை தாண்டி சென்று
விட்ட ஆண்டு பல சாதனை
புரிந்து பலரின் பாராட்டையும்
சிலரின் விமர்சனங்களையும்
சந்தித்த தடாகம் சலிக்கவில்லை.
மீண்டும் புயலாக எழுந்து
விட்டது புது ஆண்டின் இரண்டாம்
மாதமே அடுத்த சாதனையை
நிறைவேற்றவே பல அறிஞர்கள்
கவிஞர்களை தாங்கியுள்ள நாடு
இந்தியா அந்த நாட்டை நாடியே
இலங்கை எழுத்தாளர்கள் சென்று
நூல் வெளியீடு செய்து பாராட்டுப்
பெற்று வந்துள்ளனர் வருகின்றனர்.
ஆனால் அதை மாத்தி அமைத்துள்ளார்
எங்கள் தடாகத்தின் ஒருங்கிணைப்பாளர்
சகோதரி கலைமகள் ஹிதாயா றிஸ்வின்
கவியருவி றியாஸ் நூல் வெளியீட்டுக்காக
முதல் முறையாக இந்தியக் கவிஞர்கள்
இலங்கை சென்றுள்ளனர்.
வருகை தந்த கவிஞர்கள் அத்தனை
பேருக்கும் தடாகத்தின் சார்வாக
கௌரவப் பட்டமும் விருதும் வழங்கி
நல்ல நட்வுறவை வளர்த்து மகிழ்வோடு
வழி அனுப்புகின்றது தடாகக் குழுமம் .
பெண்களால் நாடாத்தப் படும்
தடாகத்தின் சாதனைகள் தொடரும்
அதன் தலைவி ஹிதாயாவின் தாரகை
மந்திரம் இவைதான் அதை உண்மையில்
பாராட்டுகின்றேன் தடாகத்தின் புதிய
முயற்சிகள் பெற்றி பெற நாமும் வாழ்துக்
கூறுவோம் வாருங்கள் நட்பூக்களே ...../////
வாழ்த்துக்கள் அக்கா :-)
No comments:
Post a Comment