Wednesday 28 December 2016

அவள்

அவள்வருகிறாள் கையில் வண்ணமலரினாலான மாலை.
அவளின் கண்ணில் ஒரு விதக் கலக்கம்
அவளின் கால்களில் ஒரு தயக்கம்.
அவள் மீண்டும் முன்னேறவே முயல்கிறாள்.
அவள் உடலில் ஒரு விதமான பதட்டம்
அவள் மனம் எதையோ நினைத்துப்  பயம் உறுத்தியது
அவள் இருந்தும் பின்னடையவில்லை
அவள் முன் நோக்கியே மெதுவாக நகர்கிறாள்
அவள் உள்ளே நுழைய வேண்டிய கட்டாயம்
அவளுக்கு இது இக்கட்டான நிலமையாப் போச்சு
அவள் நொந்து கொண்டாள் தன் விதியை எண்ணி
அவளைக் கண்டதும் சிலர் முகம் சுழித்தன.
அவளைப் பார்த்து ஒரு சிலர் வசப்  பாட்டு பாடினார்கள்
அவளின் காதில் படும் படியே
அவள் கலங்கும் விழி நீரை இறங்க விடாத வாறு செல்கிறாள்
அவளின் இருண்ட வாழ்வை எண்ணி வருந்தினாள் 
அவள் இத்தனை அவமானங்களையும் தாங்கியபடி
அந்த திருமண இல்லத்தில் ஏன் நுழைந்தாள்
அவள் ஒரு பூ வியாபாரி   இத்தனை பேர் சென்று வரும்
ஒரு சிறப்பான இடத்தில்
அவளை மட்டும் ஏன் ஏழனமாக பார்த்தார்கள்
அவள் வாழ்வு இழந்த ஒரு கைம்பெண் 
வெள்ளை உடை   தரித்த. ஏழைப் பெண் .

    

No comments:

Post a Comment