அரிதாரம்  பூசாத வேசம்
ஆனாலும் நன்றாகவே 
நடிக்கின்றேன் .....///
என் உள்ளே ஆயிரம்
 கவலைகளை சுமக்கின்றேன்  
உலக வாழ்க்கையிலே
 நானும் மனிதனாக
 நடை போடுகின்றேன் .....////
தடைகளை தாண்ட 
துடிக்கின்றேன் 
இருந்தும் பல 
இடையூறுகளை 
சந்திக்கின்றேன்  .....////
அனை உடைத்தே
 பெருக்கெடுக்கும் 
விழி நீரை துடைத்து 
விட்டு நடைபோடுகின்றேன் ....///
உண்மை அன்பை 
தேடி ஓடுகின்றேன்  
ஏமாற்றத்தைப்  பரிசாக 
அள்ளி விடுகின்றேன்  .......////
வலிகள் தாங்கி தாங்கி 
இதயம்  வலிமை பெற்று 
விட்டதாக உணர்கின்றேன் 
உள்ளம் வலு இழந்து 
வருவதையும் புரிந்து 
கொள்கின்றேன்  .......///////
இறைவனுக்கு என்ன 
கோபமோ  வகுத்து 
விடுகின்றான் 
ஒரு தண்டனையை 
பிறக்கும் போதே  ...../////
இந்த பொல்லாத 
உலகில் தினம்  தினம் 
தண்டனையை அனுபவித்த 
படியே  வாழ வேண்டும் 
என்பதற்காகவே
வாழ்கின்றேன் ........////
உயிர் துறக்கவும் துணிவு 
வேண்டும் துணிவோ கரம் 
கொடுக்கவில்லை 
அதனாலே  உயிரை சுமந்து 
வாழ்கின்றேன் .......////
துணை இன்றி 
நான் இல்லை 
எப்போதும் துணையாக 
கை கொடுக்கின்றது துயரம் ....../////
இன்பம் எள் அளவு 
துன்பம் கடலை அளவு  
விதையிட்டு பார்த்தால் 
மனதிலே நிறைந்து 
விட்டது  துன்பம் 
இடம் இல்லை இன்பத்துக்கு ......////
இருந்தும் இன்பத்தையும் 
பயிர் இட்டதாக எண்ணி 
சிரிக்கின்றேன் ..........//////
போலி நடை முறைக்கும் 
படிப்புக்கும் பணத்துக்கும் 
முன்னே அன்புக்கு 
வேலையில்லை ....../////
அன்பை தவிர எண்ணிடம் 
வேறு இல்லை  
போலியான குணம் 
என்னிடம் அமரவில்லை......./////
  தலை  முடியின்  கீழே இறைவன்
போட்டான் ஒரு கோலம்  
அதை அவனே அழித்தால் 
உண்டு அழிக்கும் வழி 
என்னிடம்  இல்லை .....//////
அதற்காகவே நான் 
கொடுக்கின்றேன் 
கண்ணீர் துளிகளை பரிசாக 
தினம் தோறும் ,......////
காரணம் இல்லாமல் 
வெறுக்கப்பட்டேன் 
ஆசை வார்த்தை இன்றி 
ஒதுக்கப் பட்டேன் .../
அவன் வாங்க மறுத்தாலும் 
நான் கொடுத்துக் கொண்டே தான் 
இருக்கின்றேன் நிறுத்தாமலே.
வாழ்த்துக்களை மனதினிலே 
பூக்களாய் தூவியபடி ஓசை
இல்லாமலே .../////
 
  
No comments:
Post a Comment