Saturday 24 December 2016

நாம் மனிதர்களே

கடன் கார வாழ்க்கையை மாற்ற வேண்டும்.
கடமையில் உயரவேண்டும் .

கேள்விகளுக்கு விடை அளிக்கவேண்டும்
கேள்விகளைத் தொடுக்க வேண்டும்.

அன்பால் அணைக்க வேண்டும்
அன்னை  நாட்டிலும் தலை குணியாது வாழவேண்டும்.

ஆற்றாமைகளை அழிக்க வேண்டும்.
ஆற்றலைப் பெருக்க வேண்டும்.

பொறுமை காக்க வேண்டும்
பொது உடமைகளைப் பாது காக்க வேண்டும்.

இன்னல்களை ஏற்றுக்க  வேண்டும்
இன்பத்திலும் நுழைய வேண்டும்.

தாழ்த்தப்படுவதில் இருந்து மாறவேண்டும்.
தாழ்வு மனப்பாங்கை கைவிடவேண்டும்.

அழுவதற்காகவும் விழுவதற்காகவும்
மண்ணில் மனிதனாகப்  பிறக்கவில்லை .

ஆழ்வதற்காகவும் வாழ்வதற்காகவும்
மண்ணில் மனிதனாக நாம்  உருவெடுத்தோம்.

                

No comments:

Post a Comment