பொல்லாத உறவை
தள்ளி விடவே எண்ணினேன்
உன் நினைவுகளோ
பிடி தழராத வாறு இறுக்கியது
நித்தம் நான் ரசித்த முகம்
என்னை வெறுத்தாலும்
என்னுள்ளே அலை அலையாகவே
புரளுகிறது தொட்ட குறை விட்ட குறையாக
நீ நழுவினாலும் கண்ணில் தென்படும்
சில கவி வரிகளோ புதைக்க நினைத்த
உறவைத் தட்டி எழுப்புகிறது மணி போல.
பிரிந்தாலும் புதைந்தாலும் மறக்க முடியாது
எனச் சொல்லி நகைக்கிறது ஆழ் மனம் உன்னை .
செத்துப் போக வேண்டிய நாள் முன்பே
நான் அறிந்தால் நிச்சயம் உயிர் திறக்கும் முன்
எப்போதும் போல் செய்தி விடுவேன்
இறுதியான செய்தி என்று கூறாமலே
நீயும் எப்போதும் போல் அலட்சியம்
செய்வதும் என்னவோ உறுதியானவை தான்.
No comments:
Post a Comment