உன்னைப் பார்க்க நான்
ஏக்கத்தோடு வாழ்ந்த நாட்களோ
ஏகப்பட்ட நாட்கள்.
ஏக்கம் தொலைத்து
உனைப் பார்க்க வந்த வேளையிலே
உன் வரவேற்பு உண்மையிலே
அடடா பிறமாதம் பிரமித்தது என் கண்கள்....!
ஊமத்தம் பூ தூவி வரவேற்றாய்.
அரளிப் பூ மாலை
போட்டு வாழ்த்துரைத்தாய்.
தீப்பொறியாலே
கோலங்களும் போட்டிருந்தாய்
கள்ளிச் செடி முற்களால்
இருக்கை அமைத்திருந்தாய்
அதிலே பாசத்தோடு
அமர்த்தியும் விட்டாய்
கள்ளிப்பால் அருந்தக் கொடுத்தாய். ....!
அத்தனையும் புன்னகையோடு
ஏற்றுக் கொண்டேன் நான்
ஏன் எதற்காக உன் பிரிவின் வலியை
விட இவை ஒன்றும் பெரிது
இல்லை என்பதற்காக....!
உன் நினைவால்
வருந்தி இறப்பதை விட
நீ விரும்பிக் கொடுக்கும்
விஷத்தாலே இறப்பது மேல் என்று
உன் அன்புக் கரம் கொடுத்த கள்ளிப்பால்
கிண்ணத்தைக் காழியாக்கினேன் ....!
மறு ஜெம்மத்திலாவது
ஏற்றுக் கொள்வாய்
என் அன்பை என்னும்
நம்பிக்கையில்
உயிர் திறக்கிறேன் என் அன்பே ....!
No comments:
Post a Comment