நல்லவை கெட்டவைகளை உணராப் பருவம்.
நல்லவர் கெட்டவர் இனம் பிரிக்காப் பருவம்.
நல்லவை சொல்வோரை ஏற்றுக்காத பருவம்.
நம்மில் உண்டு அவை இளமைப் பருவம்.
நல்ல எண்ணம் உடையோரை கேலி பண்ணும் பருவம்.
நன்மையோடு தீயதையும் செய்யத் துணியும் பருவம். நடாக்காதவைகளையும் நடத்தவே துடிக்கும் பருவம்.
நம்மை நாமே புகழும் பருவம்.
நம்மில் உண்டு அது விடலைப் பருவம்.
நடித்துக் காட்டி பணம் பறிக்கும் தந்திரம்.
நயவஞ்சகத் தனமான மந்திரம்.
நக்கல் கேலி கிண்டலை விரும்பும் உள்ளம்.
நம்மில் உண்டு அது துன்பம் அறியாப் பருவம்.
No comments:
Post a Comment