Sunday 25 December 2016

சுனாமி

உலகையே உழுக்கிப் போட்டு.
உணர்வை உணர விட்டு
உள்ளத்தில் சாதி மத வேற்றுமையை உதற. விட்டு.
ஒன்றாக இணைந்து ஓலமிட  விட்டு .

உப்புக்கடல் ஊருக்குள் ஊர்ந்து வந்து முத்தமிட்டு.
உறக்கத்தில் இருந்த மொட்டு.
உறக்கம் தொலைத்து ஏக்கத்துடன்
அமர்ந்த மனிதர்களையும் தொட்டு.

உருட்டிப் புரட்டிய வாறு அணைத்துக் கொண்டு.
உலகையே விழி நீருக்குள் தள்ளி விட்டு
உள்ளத்தில் தாங்க முடியாத வாறு வலியைக் கிள்ளி விட்டு.
உக்கிரத்தை அடைக்கிக் கொண்டு
ஆண்டு தோறும் நிழலாட விட்டதே அந்த சோக வெட்டு.

அந்த நாள் இன்றைய இருண்ட நாள்
சுனாமி  என்னும் பெயர் ஒன்றை அறிந்த நாள்.
புன்னகையை அகில நாடும் மறந்த நினைவு நாள் 
குடிசைகளோடு கோபுரமும் இடிந்த நாள்
பசுமையோடு பசுக்களும் மாண்ட நாள்
மனிதம் உள்ள மனிதர்களால் மறக்கப்பாடாத நாள்.

அன் நாளில் உயிர் நீத்த உறவுகள்
அனைவரின் ஆத்மா சாந்தியடைய
அருள் புரியட்டும் இறைவன்    :-(

   

No comments:

Post a Comment