Saturday 24 December 2016

என் இதய வாணியே

என்  காதல் அது காதலடி
காமத்தையும் நான்
அணைத்துக் கொண்டேன்
ஒரு ஓரமடி..........\

காலம்  காலமாய்
காதலிப்பேன்
உன்னையடி
உறவென்று
உயிராக
நினைப்பதும்
உன்னைத்தானடி......\

உன் மேல் வந்த காதலடி
உள்ளே இருந்து வந்த
காதலடி.....\

நீல வானமும் நிறம்
மாறுவது இல்லை
நீந்தும் நிலவும்
அதை வெறுப்பதில்லை.....\

இடம் மாறாத விழி
இண்டும் தடம் மாறி
நோக்குவதும் ஏனடி...\

மின்சாரம் இல்லாமல்
ஒளி கொடுக்கின்றது
நட்சத்திரம்.....\

நீ என் சம்சாரம் ஆகும்
முன்பே உன் மடி மீது
இடம் தேடுகின்றது என்
அடங்கா இச்சைத்னதமடி...\

மடி கொடு மடி கொடு நீ
நான் மடியும் வரை இடம்
கொடு நீ.......\

தனக்கு  மட்டும்
தனக்கு மட்டும் என்று
நினைத்து ஓடி ஓடி
தேன் எடுத்து தாணம்
கொடுக்கும் தேனீ......\

நான் உனக்கு மட்டும்
உனக்கு மட்டும் என்று
தானாக வாயேன் நீயடி.....\

தனியாக தவிக்கின்றேன்
வாணி வருத்துகின்றாயே
வாலியின் கவி வரிகள்
போல் என்னை நீ.......\

ஓடும் குருதி ஓயாமல்
இதயத்தில் நுழைகின்றதே
உன் மேல் உள்ள காதலும்
அதனுடன் விளையாடியே
என்னை உசுப்பேற்றுகின்றதே...\

கை சேரும் வரை
காதலிப்பேன் கை
சேர்ந்த பின்னே
ஆதரிப்பேன்.....\

சாகும் வரை சேர்ந்து
இருப்பேன் வாழ்க்கை
ஒன்று நான் கொடுப்பேன்.....\

வாடாமல்லிகை போல்
உனைக் காப்பேன்
வந்து விடு என் இதய
வாணியே.........\

  

No comments:

Post a Comment