Thursday, 29 December 2016

சிங்காரி

சிங்கப்பூர்  சிங்காரி.

சிக்கனமாக உடை போட்ட ஒய்யாரி.

கிட்டக் கிட்ட வந்து   அவனை
தன் வசமாக்கிய கைகாரி.

சிரித்துப் பேசி சிலிப்பி நடந்து
அவனை  வளைத்துப் போட்ட காந்தாரி.

கம கமக்கும் திரவியம்  பூசி
உரசி உரசி பேசி  வசியம்
செய்து விட்டாள் அந்த மாயக்காரி.

மைனருக்கு துணையாக
வந்து அரண்மனையிலே
ஆட்சி புரியும்  கை இல்லா
ரவுக்கைக் காரி.

சொத்துக்கு ஆசைப்பட்டு
சத்தம்  இல்லாமல் சேர்த்துப்புட்டாள்
அந்த சிங்கை நாட்டு ஆத்தாக்காரி.

         

No comments:

Post a Comment