Friday 30 December 2016

கொடுமை

கண்ணை
  கொடுத்து 
ஒளியை
பறிப்பது  கொடுமை.

வாய்யை 
கொடுத்து
  மொழியை
பறிப்பது  கொடுமை.

உறவை 
கொடுத்து 
உரிமையை 
பறிப்பது  கொடுமை.

நட்பை
காட்டி  தடை
விதிப்பது  கொடுமை  .

பாசம்  காட்டி
பாதியில் 
பறிப்பது  கொடுமை.

பேச விட்டு 
முடிக்கும் 
முன் மீதியை 
நிறுத்துவது  கொடுமை.

ஆசை  காட்டி 
மோசம்
செய்வது  கொடுமை

ஆதரவு  காட்டி 
அகம்
முறைப்பதுகொடுமை.

இனிமையான.
வார்த்தை 
தடிப்பாக.
மாறினால்  கொடுமை.

இன்பம் 
காட்டி 
துன்பம் 
கொடுப்பது  கொடுமை.

இரவு  பகல் 
பாராது  இதய.
உறவாடல் 
செய்து
இடை  வெளி 
கொடுப்பது  கொடுமை.

நினைவு 
இழந்து
நடை  பிணம் 
போல்  'நான் 
இருப்பது  கொடுமை.

இந்தனையும் 
புரிந்து 
விட்டு நீ 
எட்டி  நின்று
வேடிக்கை 
பார்த்து
சிரிக்கின்றாயே
அதுதான் 
கொடுமையிலும்
கொடுமையெடா   கொடுமை.

     

No comments:

Post a Comment