மாதத்தில் இறுதி மாதம் /
மழை மேகம் கொட்டித்தீர்க்கும் /
ஆண்டு அழகு மலரெல்லாம் /
பூத்துக் குளுங்க மறுக்காத மாதம் /
சுடுபட்ட மணல் ஆதவனிடமிருந்து /
விடுதலை பெறும் மாதம் /
விண் இருந்து மண் வரைக்கும் /
குளிரால் சூழப்படும் மாதம் /
குதுகலமாக பிறக்கின்றது /
கிருஸ்த்துமஸ் விண் உலகை விட்டு /
மண் உலுக்கு தேவன் இறங்கி வருகிறான் /
விண்ணுக்கும் மண்ணுக்கும் /
உள்ள ஒற்றுமை கண்டு மகிழும் மாதம்/
உருகிடும் மெழுகினாலே/
மனம் கரைந்து மகிழ்கிறான் /
தேவாலயத்திலே மக்கள் வெள்ளம்/ கண்டு இதயத்திலே நுழைந்து /
அவன் அமரும் மாதம்/
அன்னையென மாதா வருகிறாள் /
அரவணைத்துப் பிள்ளைக்கு /
ஆசி கூறி மறைகிறாள் /
ஜேசுவின் நாமம் தொழும்/
மனிதர்களுக்கும் நல் மனம்/ கொண்டவனுக்கும் ஆசி புரியும் மாதம் /
பாவத்துக்குள் புதையுண்ட
ஜெம்மங்களை /
ஓரம் கட்டிச் செல்கிறான் /
தட்டினால் திறக்கும் /
தேடினால் கிடைக்கும் /
இது கிருஸ்தவரின் / தாரகை மந்திரம் /
இதைத் தவறாது
அனைவரும் உச்சரிக்கும் மாதம்/
இவை உலகில் அனைத்து/ மதங்களுக்கும் பொருந்தும் /
தேடலிலேதான் வெற்றி உண்டு /
என்று வழியுறுத்துகின்றது /
மதங்கள் என்றும் /
இதை புரிந்து நடந்தால் /
மதம் ஒரு புரட்டு இல்லை /
இறைவனும் கருவறை கொடுக்கும் / அன்னையும் ஒன்றே /.
இரண்டுமே மாறாது என்றுமே /
என்று உறுதியாய் நம்பு /
மதம் பார்த்து இனம் பிரிக்காது /
மனிதம் பார்த்து இணைந்து
வாழ முந்து/
இறுதி ஆண்டின் இறுதி மாதம் /
குளிரில் கலந்து கடக்கும் மார்கழி மாதம் /
No comments:
Post a Comment