கண்ணைக் கொடுத்து  
ஒளியைப் பறிப்பது   -கொடுமை.
வாய்யைக்  கொடுத்து
மொழியைப் பறிப்பது  -கொடுமை.
உறவைக் கொடுத்து  
உரிமையைப் பறிப்பது - கொடுமை.
நட்பைக்  காட்டி  தடை 
விதிப்பது  -கொடுமை  .
பாசம்  காட்டி  பாதியில்  
பறிப்பது  -கொடுமை.
பேச விட்டு  முடிக்கும்  முன் 
மீதியை  நிறுத்துவது  -கொடுமை.
ஆசை  காட்டி   மோசம் 
செய்வது  -கொடுமை
ஆதரவு  காட்டி  அகம் 
முறைப்பது-கொடுமை.
இனிமையான வார்த்தை  
தடிப்பாக மாறினால்  -கொடுமை.
இன்பம்  காட்டி  
துன்பம்  கொடுப்பது  -கொடுமை.
இரவு  பகல்  பாராது  இதய
உறவாடல்   செய்து இடை  வெளி  
கொடுப்பது  -கொடுமை.
நினைவு  இழந்து  
நடை  பிணம்  போல்  'நான்  
இருப்பது  -கொடுமை.
இந்தனையும்  புரிந்து  விட்டு 
நீ  எட்டி  நின்று வேடிக்கை  
பார்த்துச் சிரிக்கின்றாயே
அதுதான்  கொடுமையிலும் 
கொடுமையெடா   பெரும்-கொடுமை.
 
No comments:
Post a Comment