Sunday 30 December 2018

கொடுமை

கண்ணைக் கொடுத்து 
ஒளியைப் பறிப்பது   -கொடுமை.
வாய்யைக்  கொடுத்து
மொழியைப் பறிப்பது  -கொடுமை.

உறவைக் கொடுத்து 
உரிமையைப் பறிப்பது - கொடுமை.

நட்பைக்  காட்டி  தடை
விதிப்பது  -கொடுமை  .
பாசம்  காட்டி  பாதியில் 
பறிப்பது  -கொடுமை.

பேச விட்டு  முடிக்கும்  முன்
மீதியை  நிறுத்துவது  -கொடுமை.
ஆசை  காட்டி   மோசம்
செய்வது  -கொடுமை

ஆதரவு  காட்டி  அகம்
முறைப்பது-கொடுமை.
இனிமையான வார்த்தை 
தடிப்பாக மாறினால்  -கொடுமை.

இன்பம்  காட்டி 
துன்பம்  கொடுப்பது  -கொடுமை.
இரவு  பகல்  பாராது  இதய
உறவாடல்   செய்து இடை  வெளி 
கொடுப்பது  -கொடுமை.

நினைவு  இழந்து 
நடை  பிணம்  போல்  'நான் 
இருப்பது  -கொடுமை.

இந்தனையும்  புரிந்து  விட்டு
நீ  எட்டி  நின்று வேடிக்கை 
பார்த்துச் சிரிக்கின்றாயே
அதுதான்  கொடுமையிலும்
கொடுமையெடா   பெரும்-கொடுமை.

    

No comments:

Post a Comment