கூட மேல கூட வைச்சு
கூவி அழைக்காமல் போறவளே
கூடவே நான் வரவோ
கூச்சமிட்டு சொல்லடி பெண்ணே ..../
கூப்பாடு போட்டேன்
சாப்பாடு கேட்டேன்
கண்டுக்காம போகதே
கன்னம் சிவந்தவளே..../
கண்ணாலே வலை விரிச்சு
தன்னாலே நான் விழுந்தேன்.
முன்னாலும் பின்னாலும்
நான் தொடர்ந்தேன் ..../
வக்கனையா சோறாக்கி
வட்டியில் நீ போட்டு
கூடயிலே கொண்டு வந்து
கொன்றை மர நிழல் தேடி
உன்னோடு நான் சேர்ந்து
உண்ணும் காலம் வந்திடுமோ
பெண் மயிலே ...../
No comments:
Post a Comment