பித்தம் கொண்டு
தலையில் அடித்தால்
சித்தம் கலங்கி விடும்.
இரத்தமும் வாந்தியுடன்
தரையை தழுவி விடும்...!
உன்னை அணைத்தால்
சித்தம் தெளிந்து விடும்.
முத்தம் பிறந்து விடும்.
சத்தம் அடங்கி விடும்.
மோகம் எழுந்து விடும்..!
தாகம் தனிந்து விடும்.
இடை வெளி குறைந்து விடும்.
இளமை புரிந்து விடும்.
இனிமை கிடைத்து விடும்..!
இதயத்தின் துடிப்பு அதிகரித்து விடும்.
கொடுக்கல் வாங்கல் நடந்து விடும்.
கொண்டையில் பூ நிலைத்து விடும்.
நெற்றியில் திலகம் சிரித்து விடும்.
ஆகையால் நித்தம் நீ முத்தம்
கொடு நாம் முத்தெடுக்க.....!
No comments:
Post a Comment