உடல் வருந்தி உழைப்பவனும்
உறவு இழந்து துடிப்பவனும்
உணவு இல்லாமல் தவிப்பவனும்
தன்னை மறந்து உறங்கும்
வேளை இரவின் மடியே...../
கூவி எழுப்பும் சேவலும்
பாடி அழைக்கும் குயிலும்
ஓசை கொடுக்கும் ஆலைய மணிக்கும்
சற்று ஓய்வு கொடுக்கும் வேளை
இரவின் மடியே ...../
துயரம் தலை தூக்கும் போது
மழலை போல் நாமும் பெற்றவள்
மடி சாய்ந்து அயர்ந்து தூங்கையிலே
சொர்க்கம் ஆகும் அன்றைய
இரவின் மடியோ ...../
நோய் இன்றி துன்பம் இன்றி
கள்ளம் இன்றி கபடம் இன்றி
குற்ற உணர்வு இன்றி ஓலைக்
குடிசையில் உறங்கினாலும்
தூக்கம் வாரிக் கொடுப்பதோ
இரவின் மடியே ..../
போதையில் தள்ளாடுவோருக்கும்
உடல் விற்றுப் பிழைப்போருக்கும்
கொடியவை கொடுமையானவை
இந்தை இரவு வேளை என்பதே...../
No comments:
Post a Comment