பிரிந்து போய் விடு
கட்டளையிடுகின்றேன்/
கண்மணியை மறந்து விடாதே மண்டாடுகின்றேன் /
இனிய காதல்
நினைவாகட்டும் /
இளமை வாழ்வை
தொடர்ந்து விடு /
மனதினில் வளர்த்த ஆசையை
அறுவடை செய்து விடு /
மணவாழ்க்கைக் கற்பனை
விதையை பதியமிட்டு விடு/
மலரும் மலர் எல்லாம்
மாலையாவதில்லை /
அவை மாலையான பின்னும்
மணாளன் தோள் சேர்வதில்லை /
உறவும் பிரிவும்
வாழ்க்கையில் ஓர் அங்கம் /
பிரிந்த பின்னும் உள்ளத்தில்
எண்ணங்கள் தங்கும் /
No comments:
Post a Comment