Monday 24 December 2018

ஆஞ்சனேயர் பக்தன்

எங்கம்மா சொன்னாங்க /
வீதிக்குச் சென்றதுமே /
மங்கையர்  உடை  நடை கண்டு /
மாண்டு விடும்  உன் ஆஞ்சனேயர் /
பிடிவாதம் என்று /

நான் அதைக்
கண்டுக்கவேயில்லை./
வென்று விட்டது
இன்று அம்மா வாக்கு  /
நங்கை அவள் நடை கண்டேன் /
புத்தி இழந்தேன்  /
மங்கை இவள்  இடை கண்டேன் /
பக்தி இழந்தேன் /

அங்கே பெண்கள் கூட்டம்
கண்டேன்  /
துறவரம்  மறந்தேன்
என்  பக்கம் ஒருத்தி வந்தாள்
பரபசத்தில் மிதந்தேன்  /
செக்கச் செவந்த. இதழ் கண்டேன் /
கட்டுக்கடங்காத. ஆசை கொண்டேன் /

மீன் விழி கண்டேன்/
மயங்கி நின்றேன் / 
தேன் தமிழில் சொல் 
தேடி அலைந்தேன் /
காதல் கவிஞனாக  மாறி விட்டேன்  /
அஞ்சலை  கெஞ்சலை /
வான் சோதி மான் சோதி
என்று கவிதை கிறுக்குகின்றேன் /

தெருவிலே நடை  போடத்
தொடங்கி  விட்டேன்/
தெருத் தெருவா போகின்றேன்/
எதை எதையோ சொல்லி மங்கை
மனங்களைத் தேடுகின்றேன் /
ஆஞ்சனேயர்  ஆலையத் தெருவை
மாத்திரம் மறந்து விட்டேன் /

மின்சாரக் கண்களையும் /
குளு குளு  கன்னங்களையும் /
இஞ்சி இடையையும் காட்டி /அப்பாவியான என்னை / (பா )பாடும் கவிஞனாக. மாற்றி  விட்டாளுங்களே /😜

No comments:

Post a Comment