பட்டிக் காட்டுப் பொன்னையா
********************************
கட்டணம் கொடுத்து
பட்டணம் போனதில்லை/
கட்டவண்டிப் பிழைப்பு
கை விட்டதுமில்லை/
காளை மாடு ஓட்டியே
களையெடுப்பான்/
காலம் பூராவும்
சேற்றோடு உறவாடுவான்/
உழைப்பே உயர்வென
தினம் உரைத்திடுவான் /
உடலுக்கு கோமணமே
போதும் என்பான்/
விமானிக்கும் விருந்து
வைக்கும் விவசாயி /
ஏழ்மை என்பது எனக்கு
குறையில்லை என்றான்/
No comments:
Post a Comment