Wednesday 23 November 2022

பேசும் சிலையே
**--**************
ஏந்திழையாள் சிற்றிடையில் 
சிறு  பொற்குடமோ /
செதுக்கிய சிற்பிக்கு 
ஏற்றிடலாம் மகுடமே/

நகராத பாதங்கள் 
நகர்த்துகின்றது கற்பனைகளை/
கடல் மலை 
தாண்டி வெகுதூரம் /

இமைத்திடாத விழிகளும் 
அசைந்திடாத கரங்களும்/
அசைத்துப் பார்க்கின்றது
அசராதவன் நெஞ்சத்தை/

மூச்சும் பேச்சும் 
கிடைத்திடாப் பெண்ணாயிருந்து  /
ஆயிரம் கவிதைகள் படைத்திடும்
கவிஞன் ஆக்கினாள் என்னை/

பேசும் சிலையே நீயும்
ஆசைகளை மௌனமாகவே/
நோக்கிய நொடியே
தேக்கி  விட்டாயடி/

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment