பேசும் சிலையே
**--**************
ஏந்திழையாள் சிற்றிடையில்
சிறு பொற்குடமோ /
செதுக்கிய சிற்பிக்கு
ஏற்றிடலாம் மகுடமே/
நகராத பாதங்கள்
நகர்த்துகின்றது கற்பனைகளை/
கடல் மலை
தாண்டி வெகுதூரம் /
இமைத்திடாத விழிகளும்
அசைந்திடாத கரங்களும்/
அசைத்துப் பார்க்கின்றது
அசராதவன் நெஞ்சத்தை/
மூச்சும் பேச்சும்
கிடைத்திடாப் பெண்ணாயிருந்து /
ஆயிரம் கவிதைகள் படைத்திடும்
கவிஞன் ஆக்கினாள் என்னை/
பேசும் சிலையே நீயும்
ஆசைகளை மௌனமாகவே/
நோக்கிய நொடியே
தேக்கி விட்டாயடி/
No comments:
Post a Comment