Wednesday 23 November 2022

காதல் தந்த காயமே.
*********************

காதல் கீதம் கொண்டு 
காதலியே பாடவோ 
வாழ்த்து ஒன்று
வாழ்க நீ வாழ்க. காதல் 
தந்த காயமே நீ வாழ்க -/

ஈருடல் ஓர் உயிர் 
என்று ஆன பின்னே.
உதறி விட்டு சென்ற பெண்ணே.
துடிக்கும் இளமை தழரும் முன்னே.
முளைத்த தாடி நரைக்கும் முன்னே.
பிடிக்கும் கரங்கள் வலு இழக்கும் முன்னே.
பிறந்த மோகம் இறக்கும் முன்னே.
இணைந்து வாழ வாவென்று
அழைத்தேனே  கண்ணே .
மறுத்தவளே நீ வாழ்க./

காதல் கீதம் கொண்டு 
காதலியே பாடவோ
 வாழ்த்து ஒன்று
வாழ்க நீ வாழ்க. 
காதல் தந்த காயமே நீ வாழ்க -/

   சரணம் (1)

புன்னகையால் வளைத்துப் போட்டு.
கண்அசைவால் கசக்கிப் போட்டு.
இடை காட்டி. தொடை காட்டி.
தொப்புள் வரை வித்தை காட்டி
மயக்கிப்புட்டு.
கட்டும் தாலியும் வேண்டாம்.
கட்டில் சொந்தமும் வேண்டாம் 
என்று வெறுத்தாவளே  
பெண்ணே. நீ வாழ்க கண்ணே நீ வாழ்க/

காதல் கீதம் கொண்டு 
காதலியே பாடவோ 
வாழ்த்து ஒன்று
வாழ்க நீ வாழ்க. 
காதல் தந்த காயமே நீ வாழ்க -/

    சரணம் (2)

தென்னந் தோப்பு .வாழைத் தோப்பு.
நாம் தொட்டு விளையாடிய மாந் தோப்பு.
அத்தனையிலும் உன்னைத் தேடித் தேடி
அழைந்தேனடி. கவலைக் கூண்டில் நுழைந்தேனடி.

சுகமான வாழ்வு இழந்தேன்.
சொத்தான மானம் இழந்தேன்.
சொர்க்கம் மதுவென உணர்ந்தேன்.
மதுக் கடைப்  பக்கமே அமர்ந்தேன்.
கள்ளுக்கடைக்கு வாடிக்கையானேன்.
தெருமுனை நாய்க்கு நண்பனானே.
கன்னி உன்னால் 
போதைத் தண்ணீருக்கு இரையானேன்.
இத்தைனை பரிசு அளித்த தேவதையே வாழ்க நீ பல்லாண்டு வாழ்க/

காதல் கீதம் கொண்டு 
காதலியே பாடவோ 
வாழ்த்து ஒன்று
வாழ்க நீ வாழ்க. 
காதல் தந்த காயமே நீ வாழ்க -/

ஆர் எஸ் கலா 

(என்றோ எழுதியவை 
இன்று கண்ணில் பட்டது  )

No comments:

Post a Comment