Saturday 19 December 2015

காலத்தின் கெடுதல்

கொடுக்கும் வாக்கை
நிறைவேற்ற முடியாமல்
கெடுக்கும் காலம் சில வேளை
நடக்கவேண்டிய காரியத்துக்குத்
தடைக் கல்லாகப் போகும் நம் வாக்கு
அந்த வேளை  ....////

இந்தா என்பதெல்லாம்
அந்தா என்று போய்விடும் 
சில பேர் இதுதான் உன்
நடை முறையோ என்று கேலி
பண்ணவும் நேரிடும் 
காலமும் நேரமும்
எப்போதும்ஒருத்தருக்கு
சாதகமாக இருப்பதில்லை...///

அது பாதகத்திலும் மாட்டி
விட்டு நகர்ந்து விடும்
நம் நற்குணம் நற்பண்பு
அப்போது எடுபடுவதில்லை...///

  விட்ட சிறு தவறு
பெரிதாக உரு எடுத்து
கொடுக்கும் எல்லை
இல்லாத் தொல்லை  ....///

கட்டிக்காத்த கௌரவத்தை
கிள்ளி விடும்
இதற்காகவே  எதிர்பார்த்து
இருந்த குள்ள நரியெல்லாம்
துள்ளும்  ....////

கள்ளம் இல்லா வாக்கை
குப்பைக்கு அள்ளும்
பிள்ளை மனம்
கொண்டவர்களையும்
கண்ணீர் வெள்ளத்தில்
தள்ளும்  ....///

கூப்பாடு போட
கூட்டங்கள் சேரும்
இல்லாத பொல்லாத
விஷப் பூக்களை
நாவாலே தூவும்  ...////

துப்புக்கெட்டவனும்
எட்டி நின்று துப்புவான்
தப்பு இன்றி தண்டனைக்குள்
நம் இதயம்  இறுக்கமாகி
நொறுங்கும் ...../////

      

No comments:

Post a Comment