கொடுக்கும் வாக்கை
நிறைவேற்ற முடியாமல்
கெடுக்கும் காலம் சில வேளை
நடக்கவேண்டிய காரியத்துக்குத்
தடைக் கல்லாகப் போகும் நம் வாக்கு
அந்த வேளை ....////
இந்தா என்பதெல்லாம்
அந்தா என்று போய்விடும்
சில பேர் இதுதான் உன்
நடை முறையோ என்று கேலி
பண்ணவும் நேரிடும்
காலமும் நேரமும்
எப்போதும்ஒருத்தருக்கு
சாதகமாக இருப்பதில்லை...///
அது பாதகத்திலும் மாட்டி
விட்டு நகர்ந்து விடும்
நம் நற்குணம் நற்பண்பு
அப்போது எடுபடுவதில்லை...///
விட்ட சிறு தவறு
பெரிதாக உரு எடுத்து
கொடுக்கும் எல்லை
இல்லாத் தொல்லை ....///
கட்டிக்காத்த கௌரவத்தை
கிள்ளி விடும்
இதற்காகவே எதிர்பார்த்து
இருந்த குள்ள நரியெல்லாம்
துள்ளும் ....////
கள்ளம் இல்லா வாக்கை
குப்பைக்கு அள்ளும்
பிள்ளை மனம்
கொண்டவர்களையும்
கண்ணீர் வெள்ளத்தில்
தள்ளும் ....///
கூப்பாடு போட
கூட்டங்கள் சேரும்
இல்லாத பொல்லாத
விஷப் பூக்களை
நாவாலே தூவும் ...////
துப்புக்கெட்டவனும்
எட்டி நின்று துப்புவான்
தப்பு இன்றி தண்டனைக்குள்
நம் இதயம் இறுக்கமாகி
நொறுங்கும் ...../////
No comments:
Post a Comment