Sunday 6 December 2015

மனிதமே வெல்லும் மதத்தை விட

துயர் துடைக் உதவிக்கரங்கள்
ஓராயிரம் நீழுகின்றன.
சாதி இல்லை மதம் இல்லை
 கண்ணில் தெரிவது மனித
நேயம் ஒன்றே. ....../////
மழை நீரினால் அழிந்த இல்லம்
கண்டு கண்ணீர் மழை நீண்டு
விட்டது மக்களிடையே. ......//////
பேட்டி என்னும்  பெயரிலோ
செய்தி சேகரிக்கும் நோக்கிலோ
 அவசியம் இல்லாக் கேள்விகளை
தொடுத்து  துவண்டு போன
மக்களின் வலியைக் கூட்டாதீர்கள்
ஊடகவியளார்களே. ......//////
 அகோரம்  கொண்டு சுனாமி
வாரி சுருட்டிப் போட்ட போது
பல உடல்களை ஒன்றன் மேல்
ஒன்றாக போட்டு புதைக்க
 இடம் கிடைத்தது. ......///////
வானம் பொழிந்து தள்ளியது
மனிதனுக்கு ஆறடி மண் உரிமை
அதையும் பறித்துக் கொண்டது. ....//////
 இறந்தவனோ பரனிலே
 உறங்க துடிப்பவனும்
அதன் அருகிலே. ஆயிரம்
பணம் இருந்தும் அலங்காரமும்
இல்லை அடைத்து வைக்க
பெட்டியும் இல்லை. .....//////
ஆனாலும் மூக்கை மூடிக் கொண்டு
கடமைக்காக வந்து துக்கம்
விசாரிக்கும் கூட்டத்தின்
தொல்லையும் இல்லை......//////
 இந்து ஆலயம்  மசூதி  கிருஸ்தவ
தேவாலயம்  இந்தனை கட்டிடம்
தெருவில் எதுக்கு .......////////////
ஆதி கால மனிதன்
 போல் நீர் நெருப்பு நிலம் காற்று
இவைகளை வணங்குவோம்
 சீற்றம் குறையட்டும் இயற்கையிடம்
இந்த  மழையினிலே  அழிந்த
மதமும் பிடிவாதமும்  இப்படியே
மறையட்டும்......................./////


1 comment:

  1. மதமும் பிடிவாதமும் மறையட்டும்

    ReplyDelete