Friday 25 December 2015

அவள் அப்படித்தான்

கடு கடுப்பான முகம்
ஆனால் அவள்
கொடுமைக்காரியில்லை. ...../////

கடுகு அளவும் அவள்
நெஞ்சில் இன்பம் இல்லை  ......////

நிலைத்து விட்டது
நெடு நாளாக துன்பம்
அவளின் இதழ்களோ
பட. பட என்று பேசும்
ஆனால்  அவள்
பத்திரகாளி இல்லை .......///////

பட படக்கும் மனதை
கட்டுப்படுத்தத் தெரியாத
அப்பாவி  சிடு சிடு என்றே
இருப்பாள் அவள்
சிடுமூஞ்சி இல்லை  ......./////

வார்த்தைகளைக் கொட்டித்
தீர்க்கும் நாக்கை அவள்
வளர்த்து விட்டாள் 
கர்வம் கொஞ்சம்
தூக்கல் இதனாலே
அவளுக்குப் பெரும் தாக்கல்  ......////

தானும் பெரும் மகான்
என்று மார்பு தட்டுவதாலே
  மாற்று வழி தேடி
நகருகின்றன அவளின்
உறவுகள் எல்லாம்  ......./////

வேற்று மதக் காரனை
அவள் ஆழ் மனதளவும்
மதிப்பது இல்லை
அது ஏன் என்று இன்னும்
நான் அறியாத பிள்ளை.......////

       

No comments:

Post a Comment