Sunday 13 December 2015

மறந்து விட்டாயா மனமே

தினமும்  தட்டிய கரங்கள் தான்.
அழைத்த இதழ்கள் தான்.

உனை ரசித்த விழிகள்தான்
நினைக்க மறவாத மனம் தான் ..

இன்று ஏன் இந்த மாற்றம்.
கொண்டது வெறுத்து விட்டதா.

மறந்து விட்டதா.
மரத்து விட்டதா.
அழுத்து விட்டதா.
சளித்து விட்டதா.

உன் மறு மொழி
காணாமையால்
நிறுத்தி விட்டனவா ..?

அளந்து மொழி பேச வில்லை
நெறுத்துப் பாசம் காட்ட வில்லை.

நகர்ந்து செல்லும் ஒவ்வொரு
நாள் பொழுதையும் உன்னை
நினைக்காமல் கழித்தது இல்லை ...///

ஏன் இவை உமக்கு புரியவில்லை
நெடு நாளாக நான் உனக்கு
ஒரு தொல்லை

விடுதலை விடும் நாள்
மிகத் தொலைவில் இல்லை

வாசம் இல்லா முல்லை 
வேசம் போடத் தெரியாப்பிள்ளை
நான் பச்சோந்தியில்லை......////

       

No comments:

Post a Comment