மண்ணும் செடியும்
இணைந்து பூத்த மலர் போல்
நானும் மலர நினைத்தேன்
இரு இதயத்தின் இடையிலே
அன்பு என்னும் மலராக ..
ஆனால் இங்கே
அன்புக்கு இடம் இல்லை
அம்புக்குத்தான்
மதிப்பாகி போனது
எய்தவனின் அம்பு
இதயத்தை கிழித்த போதும்
அவனுக்கு இடம்
கொடுக்கான் இதயத்தில்
நாம் தூவும் அன்பு
கண்ணீர் வடித்தாலும்
கண்டுக்காமலே நடக்கான்
யாரை நம்புவது ஆறுதல்
கூறுவோரும் இங்கு இல்லை
அரவணைப்போரும் இல்லை
எல்லாமே போலி இதயமே
இல்லாதவன் வாழ்வு தான்
என்றுமே ஜாலி.
No comments:
Post a Comment