தேன் அற்ற மலரும்
பால் வடியாத பூக்களும்
சாமி பாதத்துக்கு தடை
என்று என்றோ ஒரு நாள்
சைவ சமய நூலில்
படித்ததாக ஞாபகம். .....////
ஆனால் இன்று சிவன்
கழுத்திலே வாடாமல்லி
பூவால் ஆன மாலை
காட்சி கொடுக்கின்றது
கட்சிதமாக. .....////
இறைவனுக்கு
வகுக்கப்பட்ட தடையே
நீக்கம் கண்டு விட்டது
மனிதனுக்கு மனிதனால்
போடப்பட்ட விலங்கு
இன்னும் இறுக்கமாகவே
உள்ளது ...../////
வாழ்வு இழந்தவள்
பிறந்த குழந்தையை
முதலில் தூக்கக் கூடாது
பிறந்த நாள் வாழ்த்து
கூறக் கூடாது
மங்கள காரியங்களில்
முன் இருக்கக் கூடாது ....////
இன்னும் மீளவில்லையே
இந்த அறியமையின்
மிச்சம் இதனாலே
வேதனை தான் உச்சம் ,....///
No comments:
Post a Comment