பட்டு சேலை கட்டி கசங்காமல்
வீதியிலே பவனி வரவும்
விழாக்களிலே சென்று
அமரவும் ஆசை .,/
தேனோடு கொத்து மல்லிகை
மொட்டு எடுத்து சரம் கோர்த்து
பிண்ணிய சடையை களைத்து
விட்டு மலர் உதிராத வண்ணம்
முடியில் சூடிக்கொண்டு தொட்டுத்
தொட்டு பார்க்க ஆசை .../
கை நிறையவே வளையல் போட்டு
தூக்கி தூக்கி குளுக்கி விளையாட
ஆசை ..../
முத்து நிறைந்த கொலுசு போட்டு
மாடிப் படியினிலே துள்ளி
ஓட ஆசை .../
தங்கத்தை தள்ளி வைத்து விட்டு
கலர் கலர் சிமிக்கி போட்டு
தலையை அசைத்து ரசிக்க ஆசை ....//
மஞ்சள் இட்ட முகத்திலே
வட்டப் பொட்டு வைத்து அம்மன்
ஆலயத்தை சுற்றி வர ஆசை .....///
ஆசை ஆசை இத்தனையும்
என் ஆசை ....////
முடித்தாள் தோழி சொல்லி
ஓசை இல்லாமலே ....////
கேட்டவனுக்கோ பதில் உரைக்கவும.
முடியவில்லை இமை இமைக்கவும்
இயலவில்லை விழித்து நின்றான்
தன்னை மறந்து நின்றான் .....////
மீண்டும் தோழியே கூறினாள்
இது ச்சும்மா ஜாலியடா என்று
முடித்து விட்டாள் ....///
அவனோ சிந்திக்கத் தொடங்கி விட்டான்
இவை சராசரி பெண்ணின் ஆசைதான்
நிறைவேற்ற வழி இல்லையே
அவள் ஒரு கைம்பெண் .....////
இத்தனைக்கும் செவி கொடுத்தவன்
விழி உறங்குவதற்கு ஏது வழி ...?
தவிக்கும் மனதுடன் தாங்க
முடியாத் துயரத்துடன் தோல்வியை
ஒப்புக் கொண்டான் நோ டில் என
விடை பெற்றுக்கொண்டான் .,..//
மனம் நிறைந்த வலியுடன்
அதை மறைத்து சிரிப்பைக் காட்டி
நடை போட்டான் ஆழ் மனதிலே
விடை தேட தொடங்கி விட்டான் .....///
No comments:
Post a Comment