Sunday 13 December 2015

வயிற்றுப் பசி

பசி வந்தால் பத்தும் பறந்து விடும்.
தீ சுட்ட வலியும் மறந்து விடும்.
மீண்டும் திருட கை நீண்டு விடும் ....///

உழைத்து உண்ண
மனம் விரும்பி  விடும்.
உழைப்பு இல்லாத பட்சத்தில்
பிச்சை எடுக்க மனம்
துணிந்து விடும்  ....///

கஞ்சன் வீட்டு வாசலிலும்
குரல் ஒலித்திடும்.
கொஞ்சம் சாதம் கிடைத்தாலும்
மனம் மகிழ்ந்திடும்...///

எச்சிப் பாத்திரம் தேய்த்து
விரல் தேய்ந்து விடும்.
வச்சி உண்ணும் உணவு
எச்சானாலும் சுவையாக
தெரிந்து விடும் ....///

ஒரு சாண் வயிற்றுக்காக
ஓராயிரம் பேரின் அழுக்கையும்
சுத்தம் செய்ய நேர்ந்திடும்.
அகோரப் பசி கொலை கொள்ளை
வரை கொண்டு நிறுத்திடும்..///

கொடுமைகள் பல புரிந்திடும்.
பசி போக்க தன் மானத்தையும்
இழந்திடும் .....///

அடிமை தனமான
வாழ்வையும் ஏற்றிடும்.
  கொடுக்காதவன் வாழ்வில்
தீயையும் மூட்டிடும் ......//////

பொருள் விற்று
நிலம் விற்று
இல்லம் விற்று
உடை விற்று
தன் உடம்பையும் 
விற்கும் நிலமைக்கு
கொண்டு விடும்...///

(  இந்த வயிற்றுப் பசி)

       

No comments:

Post a Comment