நலம் பெற வாழ்த்துங்கள்.
நல் மனதோடு வாழ்த்துங்கள் .
நாளும் பெறவே வாழ்த்துங்கள்.
ஆழ் மனதில் வார்த்தை எடுத்து
நாவால் வாழ்த்துங்கள்.
சுகமாக வாழ வாழ்த்துங்கள்.
தூய சொற் கொண்டு வாழ்த்துங்கள்.
செந்தமிழால் வாழ்த்துங்கள்.
சிறப்புரையால் வாழ்த்துங்கள்.
சிறப்பாக வாழ்த்துங்கள்.
சினம் எழாத வாறு வாழ்த்துங்கள்.
புன் முறுவலுடன் வாழ்த்துங்கள்.
இன் முகத்துடன் வாழ்த்துங்கள்.
இன்றுப்போல் என்றும் நிலையான
செல்வச்செழிப்புடன் வாழ்க வளர்க
பல்லாண்டு என்று வாழ்த்துங்கள்
முழுமையான வாழ்த்தாய் நிறைவு
செய்யுங்கள்..
ஒரே முறை வாழப்போகிறோம் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம் ....நல்ல செயல்களை , எண்ணங்களை விதைப்போம் .... அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக ....பிறரை வாழ வைத்து வாழ்வோம்
ReplyDelete