Wednesday 23 December 2015

நான் தமிழச்சி

நான் தமிழச்சி
உன்னை விரட்டி
அடிப்பேன்
தமிழை வச்சி.....////

இன்பத்
தமிழுக்காகவே
துன்பம்
கண்ட
கருவாச்சி....///

கரங்களிலே
இல்லை
ஐயனார்
அருவாச்சி ...../////

மையினால் 
உருவான
பென.தான்
(எழுத்தாணி)
ஆட்சி ..../////

மேகத்தைப்
பிடித்து
மெத்தையிட
துடிக்கும்
என் கற்பனை
ஆட்சி  ....////

புதிய
கோணத்திலும்
தமிழை
போற்ற
துடிக்கும்
முதியாச்சி  ...////

பொய்யான
முகத்திரையை
கிழித்துப்
போட
தயங்காது
என் மனசாட்சி.....///

குறுக்குப்
பாதையிலே
வண்டி
ஓட்டாதே
என் எதிர்க்க
வந்து பேசு
அரளி
செடியிலும்
தேனோடு
மலர் உண்டு ....///

கள்ளிச்
செடியிலும்
இனிப்போடு
கனி உண்டு ....///

தமிழுக்கு
தமிழந்தான்
எதிரியாம்
இது தொண்று
தொட்டு
பேசப்படும்
வாய் மொழியாம் ....///

எதிர்ப்போரை
வீழ்த்தி
எழுவதுதான்
எழிச்சி
அதற்கு
தேவையில்லை
புரட்சி........////

  

No comments:

Post a Comment