உன் அழகில் நான்
மயங்க வில்லை.
உன் அறிவை கண்டு
மயங்கினேன் .,....///
உன் இளமை கண்டு
மயங்கவில்லை.
உன் கடமை உணர்வு
கண்டு மயங்கினேன் .,..///
உன் படிப்பில் பணத்தில்
மயங்க வில்லை.
உன் பண்பாடு அன்பு
கண்டு மயங்கினேன் ....////
நான் உன் உருவம் கண்டு
மயங்கவில்லை.
உன் உள்ளம் அறிந்து
மயங்கினேன் ...../////
உண்மையில் உன்னை
விட்டுப் பிரியும் எண்ணம்
எனக்கில்லை விட்டுக்
கொடுக்கும் மனமும் இல்லை.
பட்டாம்பூச்சி போல் என்
எண்ணம் பறக்கிறது
சொல்ல முடியா வார்த்தை
எத்தனையோ உள்ளே
இருக்கிறது ......////
சொன்னாலும்
ஏற்றுக் கொள்ளும்
மனம் உன்னிடம் இல்லை
சொல்லி மறுத்து விட்டால்
தாங்கிக்கொள்ளும்
மனம் என்னிடம் இல்லை.
விடை அறியாமலே
ஆண்டும் முடிகிறது
விடுதலை கிடைக்காமலே
விழி நீரும் தொடர்கிறது ....////
No comments:
Post a Comment