Wednesday 30 December 2015

ஏன் இந்த ஏமாற்றம்

உன் அழகில் நான்
மயங்க வில்லை.
உன் அறிவை கண்டு
மயங்கினேன் .,....///

உன் இளமை கண்டு
மயங்கவில்லை.
உன் கடமை உணர்வு
கண்டு மயங்கினேன் .,..///

உன் படிப்பில் பணத்தில்
மயங்க வில்லை.
உன் பண்பாடு அன்பு
கண்டு மயங்கினேன் ....////

நான் உன் உருவம் கண்டு
மயங்கவில்லை.
உன் உள்ளம் அறிந்து
மயங்கினேன் ...../////

உண்மையில் உன்னை
விட்டுப் பிரியும் எண்ணம்
எனக்கில்லை விட்டுக்
கொடுக்கும் மனமும் இல்லை.

பட்டாம்பூச்சி  போல் என்
எண்ணம் பறக்கிறது
சொல்ல முடியா வார்த்தை
எத்தனையோ உள்ளே
இருக்கிறது ......////

சொன்னாலும்
ஏற்றுக் கொள்ளும்
மனம் உன்னிடம் இல்லை
சொல்லி மறுத்து விட்டால்
தாங்கிக்கொள்ளும்
மனம் என்னிடம் இல்லை.

விடை அறியாமலே
ஆண்டும் முடிகிறது
விடுதலை கிடைக்காமலே
விழி நீரும் தொடர்கிறது ....////

   

No comments:

Post a Comment