ஆண்டிலே இறுதி ஆண்டு
மழை மேகம் கொட்டித்தீர்க்கும் ஆண்டு
அழகு மலரெல்லாம் பூத்துக்
குளுங்க மறுக்காத ஆண்டு .....///
சுடுபட்ட மணல் ஆதவனிடம்
இருந்து விடுதலை பெறும் ஆண்டு
விண் இருந்து மண் வரைக்கும்
குளிரால் சூழப்பட்ட ஆண்டு .....///
குதுகலமாக பிறக்கின்றது
கிருஸ்த்மஸ் விண் உலகை விட்டு
மண் உலுக்கு தேவன் இறங்கி
வருகிறான் விண்ணுக்கும்
மண்ணுக்கும் உள்ள ஒற்றுமை
கண்டு மகிழ்கிறான் .....////
உருகும் மெழுகினாலே
மனம் கரைந்து மகிழ்கிறான்
தேவாலயத்திலே மக்கள்
வெள்ளம் கண்டு இதயத்திலே
நுழைந்து அமர்கிறான....///
அன்னையென மாதா வருகிறாள்
அரவணைத்து பிள்ளைக்கு
ஆசி கூறி மறைகிறாள் .....////
ஜேசுவின் நாமம் தொழும்
மனிதனுக்கும் பாகு பாடு இன்றி
நல் மனம் கொண்டவனுக்கும்
ஆசி புரிகிறான் .......////
பாவத்துக்குள் புதையுண்ட
ஜெம்மங்களை அரவணைத்துச்
செல்கிறான் .....//////
தட்டினால் திறக்கும்
தேடினால் கிடைக்கும்
இது கிருஸ்தவரின்
தாரகை மந்திரம் .....///
இவை உலகில் அனைத்து
மதங்களுக்கும் பொருந்தும்
தேடலிலேதான் வெற்றி
உண்டு என்று அடித்துக்
கூறுகின்றது மதங்கள்
என்றும் ....../////
இதை புரிந்து
நடந்தால் மதம் ஒரு புரட்டு இல்லை
இறைவனும் கருவறை கொடுக்கும்
அன்னையும் ஒன்றே ......///
இரண்டுமே மாறாது என்றுமே
என்று உறுதியாய் நம்பு
மதம் பார்த்து இனம் பிரிக்காது
மனிதம் பார்த்து இணைந்து
வாழ முந்து.....////
அனைவருக்கும் எனது மனம்
நிறைந்த வாழ்த்துக்கள் ....../////
No comments:
Post a Comment