Thursday 24 December 2015

கிருஸ்துமஸ்

ஆண்டிலே இறுதி ஆண்டு 
மழை மேகம்  கொட்டித்தீர்க்கும் ஆண்டு 
அழகு மலரெல்லாம் பூத்துக்
குளுங்க மறுக்காத ஆண்டு  .....///

சுடுபட்ட மணல் ஆதவனிடம்
இருந்து விடுதலை பெறும் ஆண்டு
விண் இருந்து மண் வரைக்கும்
குளிரால் சூழப்பட்ட ஆண்டு  .....///

குதுகலமாக பிறக்கின்றது
கிருஸ்த்மஸ்   விண் உலகை விட்டு
மண் உலுக்கு  தேவன் இறங்கி
வருகிறான் விண்ணுக்கும்
மண்ணுக்கும் உள்ள ஒற்றுமை
கண்டு மகிழ்கிறான்  .....////

உருகும் மெழுகினாலே
மனம் கரைந்து மகிழ்கிறான் 
தேவாலயத்திலே மக்கள்
வெள்ளம் கண்டு இதயத்திலே
நுழைந்து அமர்கிறான....///

அன்னையென மாதா வருகிறாள்
அரவணைத்து  பிள்ளைக்கு
ஆசி கூறி மறைகிறாள் .....////

ஜேசுவின் நாமம் தொழும்
மனிதனுக்கும்  பாகு பாடு இன்றி
  நல் மனம் கொண்டவனுக்கும் 
ஆசி புரிகிறான்  .......////

பாவத்துக்குள் புதையுண்ட
ஜெம்மங்களை  அரவணைத்துச்
செல்கிறான் .....//////

தட்டினால் திறக்கும்
தேடினால் கிடைக்கும் 
இது கிருஸ்தவரின்
தாரகை மந்திரம் .....///

இவை உலகில் அனைத்து
மதங்களுக்கும் பொருந்தும் 
தேடலிலேதான் வெற்றி
உண்டு என்று அடித்துக்
கூறுகின்றது மதங்கள்
என்றும்  ....../////

இதை புரிந்து
நடந்தால் மதம் ஒரு புரட்டு இல்லை
இறைவனும் கருவறை கொடுக்கும்
அன்னையும் ஒன்றே ......///

இரண்டுமே மாறாது என்றுமே
என்று உறுதியாய் நம்பு
மதம் பார்த்து  இனம் பிரிக்காது 
மனிதம்  பார்த்து இணைந்து
வாழ முந்து.....////

  அனைவருக்கும் எனது மனம்
நிறைந்த வாழ்த்துக்கள்  ....../////

      

No comments:

Post a Comment