Sunday 20 December 2015

பத்தி

அசைக்க முடியாத நம்பிக்கையும்
பிரிக்க முடியாத பாசமும் 
ஒரு பத்திதான்  .....///

அள்ளிக் கொடுத்து கை சிவக்க.
பசித்தவனுக்கு  பசிதீர்த்தால்
அதில் கிடைக்கும் முத்தியும்
திருத்தியும் ஒரு வகையில் 
பத்திதான் ......//

செய்யும்  தொழிலை
செம்மையாக நேசித்தால்
அதற்கும் மறு பெயர் பத்தியே....///

  பத்தி என்று தனிப்பட
இவையும் இல்லை 
சுத்தி உள்ள அணைத்தையும்
ஒரு மனதோடு  பார்த்து
ஒருமைப்பாட்டாக.
நேசிக்கும் ஒளியின்
தீயே  பத்தி ......////

விட்ட தவறை  நினைத்து
வருந்தி பெற்ரோரின்
பாதம் பணிந்து பெறும்
ஆசியும் பத்தியே ......////

இல்லறத்தை நல் முறையில்
நடத்தி துணையை  தன்
உயிராய் போற்றி  மாற்றான்
மனைவி மீது காமப்பார்வை
வீசாது  நற்பண்போடு
நடந்தால் அவையும்
மனக்கட்டுப்பாட்டின் பத்தியே  .....///

தொண்டு தொட்டு வந்தது
இறை பத்தி  அதை என்றும்
மறவாது தொடரவேண்டும்
என்பது புத்தியே  .....///

பால் உற்றுவது பண்டங்கள்
படைத்தல் அனைத்தும்
மனிதனின் ஆத்மா திருத்தியே....///

  உயிர் பலி கொடுத்தல்
தீப்பொறி மிதித்தல்  எல்லாம்
புத்தி மான்கள் அவர்கள்
யுத்தியால் பரப்பி விட்ட பத்தியே....///

  மனசாட்சிக்குப் பயந்து
மனித நேயத்தோடு  நடப்பவனுக்கு
அவன் நம்பிக்கைதான் பத்தியே....////

  நம்மை  மிஞ்சி ஒரு சத்தி உண்டு
அவை  கண்ணுக்குப்
புலப்படுவதும் இல்லை 
அவை பத்தி என்னும் 
கோட்பாட்டை போட்டு
மதம் என்னும்  பெயரில்
மனிதனை பிரிக்கவும் இல்லை  .....///

படிப்போருக்கு தேவை
கல்வி மேல் பத்தி
உழைக்கத் துடிப்போருக்குத்
தேவை உழைப்பின் மேல் பத்தி
சாதிக்க.  நினைப்போருக்கு
தேவை நம்பிக்கை மேல் பத்தி 
எதுவானாலும் தாங்க முடிவு
எடுப்போருக்குத் தேவை
தன் உடல் மேல் பத்தி ...../////

இவைகளை மீறி பத்தி
எங்கே உண்டு..???

No comments:

Post a Comment