ஏகப்பட்ட ஏக்கங்கள் நெஞ்சுக்குள்
உன்னிடம் சொல்லி அழவே
ஏங்குது விழி மெல்ல. .....////
தூக்க முடியாத் துயரங்கள்
தலைக்கு மேலே அதை உன்னிடம்
மட்டுமே சொல்லி இறக்கத்
துடிக்கிறது நாவும் கூட. ..../////
நீ காக்க வைக்கும் காலங்கள்
ஏறிவிட்டே போகிறது ஏணி போலே...////
உன்னை நம்பி நான் காத்திருக்கும்
நாட்களோ தேய்ந்து கொண்டே
போகின்றது தேய்பிறை போலே. ..../////
வாசமான மல்லிகையும் வாடி
விட்டதும் போகும் இடமோ குப்பையிலே
பாசமான நெஞ்சம் பிரிந்து விட்டால்
சொர்க்கம் வருவதில்லை பக்கத்திலே..../////
நீ தொட்டுப் பேசத் தேவையில்லை
கட்டி அணைக்கவும் தேவையில்லை.
நான் தொடுக்கும் சொற்தொடருடன்
தொடுந்திரு அது போதும்......./////
No comments:
Post a Comment