Friday 4 December 2015

மயங்கிவிட்டேன்.....!!


வண்டுக் கண்ணு
வண்ணுக் கன்னம்
சொட்டும் தேன் இதழ்
தண்டுக் காலு அவளை
கண்ட நொடியே மாண்டது
பெண்யையை வெறுக்கும்
என் பிடிவாதம்......!!
கஞ்சத்தமான இடை
கொஞ்சம் சாய்த்து விடும்
நம்மை அவள் நடை.....!!
குயில் பாட்டு கிளி பேச்சு
எனக்கு கொடுமையாய் போச்சு
அந்த அழகியின் குரல் ஓசை கேட்ட
நாள் முதல்......!!
உதடு கடித்து மூக்கை சுழித்து
அவள் காட்டும் வெறுப்பின்
பாவனை நிறுத்தி வைக்கின்றது
பத்மினியின் நடன அசைவை
ஒரு முறை......!!
அவள் பனித்துளி பட்டு மலராத மொட்டு
இறக்கை தட்டி பறக்காத சிட்டு
நான் வைக்கத்தான் வேண்டும்
நிச்சயம் உரிமையோடு உச்சி
மேல பொட்டு.......!!

No comments:

Post a Comment