Sunday 20 December 2015

என் உயிரே

என்னை இறக்கச் சொல்லாதே
என் கூடவே உன் நினைவும்
இறந்து விடும் ....///

என்னை எரிக்கச் சொல்லாதே
என் உடலுடன் உன்
நிழல்  உருவமும் எரிந்து விடும் ....///

என்னை புதைக்கச் சொல்லாதே
என்னுடன் உன் மேல் உள்ள
ஆசையும் புதையுண்டு விடும் ...///

என்னை அறுத்து குவிக்கச்
சொல்லாதே என் உள்ளத்தில்
பத்திரப்படுத்தி இருக்கும்
உன்மேலான காதலும்
சிதைக்கப்பட்டு விடும் ....///

என்னை வெறுத்து விடாதே
என்னோடு சேர்ந்து உன் மேல்
உள்ள பாசமும் தவித்து விடும் ....////

என்னை எரித்து விட்டாயானால்
சாம்பலை கடலில் கரைக்கச்
சொல்லாதே கடல் அலையும்
கவிதையாக உன் பெயரை
தினமும் உரைத்து அழுதுவிடும் ....///

இத்தனையும் உயிர் பெற்று விட
உன் கை கோர்த்து விடு
உன்னால் என் உள்ளே
இன்பம் நிலைத்து விடும் ...////

மகிழ்ச்சி  பூத்து விடும்
இல் வாழ்க்கை கனி  இனித்து விடும் 
மழலை விதை கிடைத்து விடும்  ...////

உன் வம்சம்  செழித்து விடும் 
டும் டும் மேளம் கொட்ட
வேண்டாம் உள்ளத்தை
இணைத்து விடு என் உயிரே .....////

           

No comments:

Post a Comment