Tuesday 15 December 2015

இறைவனுக்கு பரிசு கண்ணீர் துளி

அரிதாரம்  பூசாத வேசம்
ஆனாலும் நன்றாகவே
நடிக்கின்றேன் .....///

என் உள்ளே ஆயிரம்
கவலைகளை சுமக்கின்றேன் 
உலக வாழ்க்கையிலே
நானும் மனிதனாக
நடை போடுகின்றேன் .....////

தடைகளை தாண்ட
துடிக்கின்றேன்
இருந்தும் பல
இடையூறுகளை
சந்திக்கின்றேன்  .....////

அனை உடைத்தே
பெருக்கெடுக்கும்
விழி நீரை துடைத்து
விட்டு நடைபோடுகின்றேன் ....///

உண்மை அன்பை
தேடி ஓடுகின்றேன் 
ஏமாற்றத்தைப்  பரிசாக
அள்ளி விடுகின்றேன்  .......////

வலிகள் தாங்கி தாங்கி
இதயம்  வலிமை பெற்று
விட்டதாக உணர்கின்றேன்
உள்ளம் வலு இழந்து
வருவதையும் புரிந்து
கொள்கின்றேன்  .......///////

இறைவனுக்கு என்ன
கோபமோ  வகுத்து
விடுகின்றான்
ஒரு தண்டனையை
பிறக்கும் போதே  ...../////

இந்த பொல்லாத
உலகில் தினம்  தினம்
தண்டனையை அனுபவித்த
படியே  வாழ வேண்டும்
என்பதற்காகவே
வாழ்கின்றேன் ........////

உயிர் துறக்கவும் துணிவு
வேண்டும் துணிவு கரம்
கொடுக்கவில்லை
அதனாலே  உயிரை சுமந்து
வாழ்கின்றேன் .......////

துணை இன்றி
நான் இல்லை
எப்போதும் துணையாக
கை கொடுக்கின்றது துயரம் ....../////

இன்பம் எள் அளவு
துன்பம் கடலை அளவு 
விதையிட்டு பார்த்தால்
மனதிலே நிறைந்து
விட்டது  துன்பம்
இடம் இல்லை இன்பத்துக்கு ......////

இருந்தும் இன்பத்தையும்
பயிர் இட்டதாக எண்ணி
சிரிக்கின்றேன் ..........//////

போலி நடை முறைக்கும்
படிப்புக்கும் பணத்துக்கும்
முன்னே அன்புக்கு
வேலையில்லை ....../////

அன்பை தவிர எண்ணிடம்
வேறு இல்லை 
போலியான குணம்
என்னிடம் அமரவில்லை......./////

  தலை  முடியின்  கீழே இறைவன்
போட்டான் ஒரு கோலம் 
அதை அவனே அழித்தால்
உண்டு அழிக்கும் வழி
என்னிடம்  இல்லை .....//////

அதற்காகவே நான்
கொடுக்கின்றேன்
கண்ணீர் துளிகளை பரிசாக
தினம் தோறும் ,......////

அவன் வாங்க மறுத்தாலும்
நான் கொடுத்துக் கொண்டே தான்
இருக்கின்றேன் நிறுத்தாமலே......./////

           

No comments:

Post a Comment