தத்துவங்கள் உலாவுகின்றது
கண்டதுமே என் கண்ணும்
கலங்குகின்றது
மனமும் ஒரு தாக்க நிலையை
நோக்கிச் செல்கின்றது......////
தவறு நான் செய்யவில்லை
தவறான உறவுகளை தலையாக
நம்பி விட்டேன்
நானும் பொய்யான உலகத்தில்
நுழைந்து விட்டேன் ...../////
என் மெய்யான வாக்கும் அங்கே
பொய்யாகப் போகவே மனம்
நொந்து விட்டேன்
நம்பிக் கெட்டவர்களின் பெயர்
பட்டியலில் நானும் சேர்ந்து விட்டேன் ......////
நம்பிக்கை துரோகம் செய்யாமலே
அந்த இடத்தை நெருங்கி விட்டேன்
சொல்வதை செய்ய முடியாத தூரத்திலே
அமர்ந்து விட்டேன் ......////
எல்லாம் தலை கீழாகப் போனதைக்
கண்டு வருந்துகின்றேன்
தனிமையில் நின்று......../////
No comments:
Post a Comment