Thursday 17 December 2015

யாரை நம்புவது

தத்துவங்கள் உலாவுகின்றது 
கண்டதுமே என் கண்ணும்
கலங்குகின்றது 
மனமும் ஒரு தாக்க நிலையை
நோக்கிச்  செல்கின்றது......////

தவறு நான் செய்யவில்லை 
தவறான உறவுகளை தலையாக
நம்பி விட்டேன் 
நானும் பொய்யான உலகத்தில்
நுழைந்து விட்டேன் ...../////

என் மெய்யான வாக்கும் அங்கே
பொய்யாகப் போகவே மனம்
நொந்து விட்டேன் 
நம்பிக் கெட்டவர்களின் பெயர்
பட்டியலில் நானும் சேர்ந்து விட்டேன் ......////

நம்பிக்கை துரோகம் செய்யாமலே
அந்த இடத்தை நெருங்கி விட்டேன் 
சொல்வதை செய்ய முடியாத தூரத்திலே
அமர்ந்து விட்டேன் ......////

  எல்லாம் தலை கீழாகப் போனதைக்
கண்டு வருந்துகின்றேன்
தனிமையில் நின்று......../////

    

No comments:

Post a Comment