Friday 4 December 2015

உனக்காகவே.....!!


முத்தம் கொடு நித்தம் கொடு
சொத்தாய் கொடு மொத்தமாய்
உன்னைக் கொடு ....!!
சொந்தம் தொடர
பந்தம் தொடர
சொந்தமாக உன்னுடன்
என் வாழ்வு தொடர .....!!
தாகமும் இல்லை
வெறும் வேசமும் இல்லை
உன்னை கட்டாயப்படுத்தும்
நோக்கமும் இல்லை .......!!
அன்பால் அழைக்கிறேன்
ஆசையை உரைக்கிறேன்
உன்னை நினைக்கிறேன்
உன்னை மட்டும் அணைக்கவே
துடிக்கிறேன் ......!!
பல வார்த்தை முட்டுது
உன்னிடம் கூற நினைக்கையிலே
அனைகட்டுது. கவிதையும்
அருவியாகக் கொட்டுது
கண்ணீரும் கூடவே சொட்டுது ......!!
தை மாதம் மலர்க் கோலம்
எந்த மாதம் என் மணக் கோலம்
உன் கண் ஜாலம் நான் பார்க்க
எப்போது வரும் அந்தக் காலம் .........!!
ஏக்கங்கள் ஏக்கர் கணக்கில்
துக்கங்கள் சாக்குக் கணக்கில்
சோகங்கள் மீற்றர்க் கணக்கில்
நீ கொடுக்கப் போகும் இன்பம்
எந்தக் கணக்கில் .......!!
விடை கூற வேண்டும்
விரைவாக வேண்டும்
விலைகி விடாது நீ என்றும்
இருக்க வேண்டும்
விளக்காக நீ என் இருள்வலி
நீக்க வேண்டும் .....!!

No comments:

Post a Comment