கடல் மாதா அகோரம் கொண்ட நாள்
அதன் பசிக்கு பச்சிலம் பாழகனும்
இரையான நாள்
கடல் அலைகள் பொங்கி எழுந்த நாள்
பல இல்லத்தினிலே ஒளி மறைந்த நாள்
கட்டியவனை பறி கொடுத்து இன்றும்
மாது அவள் புலம்பும் வண்ணம் விட்ட நாள்
ஊர் எல்லையைக் கடக்க ஆசைப்பட்டு
கடல் மாதா ஓடிவந்து ஊருக்குள்ளே
நுழைந்த நாள்
காடு மேடு பள்ளம் எல்லாம் தன் கைவசம்
சில நொடி பெற்ற நாள்
மனித மாமிசம் உண்டு சுவைத்த நாள்
கற்பனையோடு கண் உறங்கியவனை
கண் திறக்காமல் செய்த நாள்
மக்களின் கண்ணீரை இன்று வரை
பரிசாக பெற திரை திறந்த அந்த நாள்
இமை மூடி திறப்பதற்குள் அரக்கி போல்
அழித்து உண்டு ஏப்பம் விட்ட நாள்
புதுமையான பெயராக சுனாமி என்னும்
பெயரை பெற்றுக் கொண்டு இன்றும்
மனிதனை வருத்தி எடுக்கும் நாள்
பால் ஊட்ட வேண்டிய மழலைக்கு உப்பு
நீர் ஊட்டி அழைத்து சென்ற நாள்
மனித இனம் மறவாத துயரமான நாள்
இறைவனுக்கு சபிக்க இடம் வகுத்த நாள்
போதும் போதும் அம்மா தாயே அதுவே
என்றும் இறுதி நாளாக இருக்கட்டும்
தாயே தாலாட்டும் அன்னையே ஏழை
எழியோரின் குல தெய்வமே
உல்லாச உலகத்தில் உயர்ந்தவள்
நீ அன்றே
மீண்டும் அகோரம்
கொள்ளாதே தாங்கும்
மனம் எமக்கு இல்லை.
சுனாமியில் உயிர் துறந்த
அனைத்து உறவுகளின்
ஆத்மா சாந்தி அடைய இறைவனை
வேண்டுவோம்......../////
No comments:
Post a Comment