தெருவும் உறங்குது
தெரு நாயும் உறங்குது
உன்னைத் தேடும் விழி
உறங்கவில்லை.....................\
காற்றும் தடவுது
பனியும் அணைக்குது
குளிரும் தெரியவில்லை
உன் நினைவில் மனம்
உறங்கவில்லை...................\
குருதி பாயுது
இதயம் துடிக்குது
உன் குறும்புத்தனம்
பார்க்காத பெண்
உறங்கவில்லை.......\
குயிலும் இசைக்குது
கிளியும் பேசுது உன்
குரல் கேட்காத செவி
மயங்கவில்ை...............\
கண் உறங்காமல்
கனவும் தோணவில்லை
உன் முகமும்
காணவில்லை.................\
நான் மெத்தையை
நெருங்கினால்
தலையணை தயங்குது
உன் ஆசையில்
அணைப்பதனாலே.........\
ஏதேதோ சொல்லி
நான் புலம்பலோடு
விம்மி அழவே
என் மூச்சுக் காற்றின்
சூடு பட்டு கருகியது
மல்லிகை மொட்டு
உன்னாலே................\
பின்னாலே வந்தாய்
முன்னாலே நின்றாய்
கண்ணாலே என்னை
வென்றாய் கடைசியில்
சொல்லாமல் எங்கே
சென்றாயோ.....................\
பெண் மனம் துடிக்குது
பெண்மை தவிக்குது
நீ மௌனம் காட்கையிலே
வன்முறை நடக்குது என்
புத்தியிலே.....................\
ஊரும் ஊறங்குது
ராத்திரி நேரத்திலே
ஊரோடு சேர்ந்து
நாமும் உறங்கக்
காத்திருக்கேன்
வந்துவிடு மந்திரியே........\
No comments:
Post a Comment