தெருவேரமாகக் கூத்தாடி
துட்டுக் கறப்பேன்
தொட்டுப் பேச வந்தால்
விட்டுப் பிடிப்பேன்.......\
காட்டுக் குயிலை
போட்டிக்கு அழைப்பேன்
காட்டுப் பூனையை
உச்சு கொட்டி சுவைப்பேன்.....\
கிளிக்கு என் மொழி
கற்றுக் கொடுப்பேன்
கிளியோடு சேர்ந்து
நானும் கனி பறிப்பேன்.....\
மானோடு துள்ளுவேன்
மயிலோடு விளையாடுவேன்
பாம்புக்குப் பல் புடுங்குவேன்
பக்குபமாகத் 
தடவிக்கொடுப்பேன்.........\
காட்டுக்கு  ராணி நான்
காட்டிப் பிழைக்காத
வானி  நான்........\
இயற்கையுடன்
இணைந்தே இயன்ற
வரை வாழ்வேன்.......\
இளக்காரமாகப்  பார்த்தால்
எய்திடுவேன்  ஈட்டி
ஐயோ    ஒய்யோ என்று
ஓடிருவான்  நோட்டி........\
 
  
No comments:
Post a Comment