Saturday 30 January 2016

வித்தகன்

இசையாலே என்னை
மயக்கிய கண்ணா.......\

இந்த  ராதைக்கோ
தூக்கம் இனி
ஏதடா கண்ணா........\

உன் இதழ் வழி
பிறக்கும் காற்றும்
புல்லாங் குழல்
வழியாகவே வந்து
என் இதய அறையை
நிறப்பியதடா
கண்ணா  என் கண்ணா......\

கண்ணா நீலவண்ணக்
கண்ணா நீ எனக்கு
கண்ணானக் கண்ணனடா.....\

உன் குழல் ஓசைக்கு
ராதை நான் கீதம்
இசைக்க வேண்டும்
கண்ணா இதை நாடும்
கேட்டு ரசிக்கவேண்டும்
மன்னா என் கண்ணா .......\

இந்த ராதை உனக்கு
மட்டும் சொந்தடா
நீ யாருக்கு சொந்தமடா
கண்ணா...........\

ராதை நான் கோபம்
கொண்டால்  பெரும்
ரகளை என்று ராகத்தாலே
என்னை மயக்கும்
வித்தகனே கண்ணா
உன் முகம் காணத்தானே
என் கண் உள்ளதடா
மன்னா. என் கண்ணா...........\

No comments:

Post a Comment