Wednesday 6 January 2016

புது வரவு

நான் சாய்ந்த மார்வு
என்னை அணைத்த கரம்
தினமும் அன்பு முத்தமிட்ட இதழ்
அழகாய் செல்லப் பெயர் சூட்டி
அழைத்து வெளியே எங்கு
சென்றாலும்  வரும் போது
என்ன வேண்டும் என்று
வினாவி  பாசமாக வாங்கி
வந்து கொடுத்து மகிழும்
பழக்கத்தை வழக்கமாகக்
கொண்ட இதயம்  அத்தனையும்
மொத்தமாகக் கொள்ளை அடித்தான்
என்  பிள்ளை...........\

கணவன் ஆணார்
நான்  தந்தை என்னும்
பதவி கொடுத்தேன்
பறி போனது இத்தனையும்......\

பதவியில்  அமர்ந்த தந்தை
மாறினார்  மகனின் கச்சியில்
மார்வினிலே தொட்டில் இட்டார்
மறவாமல் முத்தமிட்டார்......////

கண்ணா  தங்கம்  ராசா என்று
அதிகமாகவே செல்லப் பெயர்களைச்
சூட்டியே  அழைக்கின்றார் வெளியில்
செல்லும் போது மறவாமல்
பிள்ளைக்கு பொம்மையுடன்
வருகின்றார்

எனக்கு  கட்டளை
பிளை கவணம் பார்த்துக்கோ
பார்த்துக்கோ நிதானமாய் என்று
நானும்  ஆட்டி வைக்கின்றேன் தலையை
நின்று.............\

பிள்ளை என்று ஒரு
ஓட்டுப் போட்டு தந்தை
என்னும் பதவி கொடுத்த
அன்னைக்கு கிடைத்த பரிசு.....\

மச்சானே  என் மேலும்
ஆசை   வைத்தாயே இது
நியாயமா  சொல்  அத்தானே
அடி  ஆத்தி  எம்புட்டு சுய நலவாதி
நீ  மச்சானே  மச்சானே.........\

    

No comments:

Post a Comment