Friday 1 January 2016

தொழிலாளி

தொழிலாளர்
கை ஓங்க
வேண்டும்
முதலாளி
கை நீள
வேண்டும் .

வறுமை ஒழிய
வேண்டும் வரவு
சிறக்க வேண்டும்
அன்பு நிலைக்க
வேண்டும் .

ஆரோக்கியம்
வருமானம் பெருக
வேண்டும் குழந்தை
தொழிலாளியின்
கொடுமை மறைய
வேண்டும் .

ஒற்றுமையே
பலம் என குரல்
ஒலிக்கவேண்டும்
பணக்காரன்
ஏழை முதலாளி
தொழிலாளி .

உயர்ந்தோர்
தாழ்ந்தோர்
என்னும் எண்ணம்
மறையவேண்டும்
நாடும் வீடும் மக்களும்
என்றும் நலமாக
மகிழ்வாக  வாழ
வேண்டும் .

அன்பு உறவுகள்
அனைவருக்கும்
எனது தொழிலாளர்
தின நல் வாழ்த்துக்கள்
குறிப்பாக. ...ஏழைத்
தொழிலாளிக்கு என்
உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள்

    

No comments:

Post a Comment