Friday 1 January 2016

நான் என்ன பாடல் பாட


இவள் மயிலாட்டம்
ஒய்யிலாட்டம்
ஆட
நான் இசை
பாட்டு பாடவா
நிஜப் பாட்டு
வாடவா ...
தெரியலேயே
தெரியலேயே....!!!!

இவள் அலையென
கரையைத்
தொட்டாட
மலரென
மலர்ந்தாட
பாம்பாட்டம்
மடமெடுத்தாட
நான் என்ன
பாடல் பாட
புரியலயே
புரியலேயே.....!!!

இவள் இதழும்
பல நடினம்
காட்ட விழியும்
வித்தைகாட்டியாட
நான் மெட்டுக்
கட்டிப் பாட
அறியவில்லையே
அறியவில்லையே....!!!!

ஆட்டமாம் பரத
நாட்டியமாம்
சங்கீத இசை
இசைக்க எனக்கும்
நாட்டமில்லையே
நாட்டமில்லையே....!!!!

இந்த ஆட்டம்
நான் பார்த்தது
இல்லையே
ஆங்கில
ஆட்டமே போட்டேனே
அரை குறைப்
பாடல் பாடினேன்
இங்கு அது
எடுபடவில்லையே
எடுபடவில்லையே.....!!!

  

No comments:

Post a Comment